மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுகளாக நடக்கும் சீரமைப்பு பணி - விவசாயிகள் வேதனை

1 hour ago 3

மதுராந்தகம் ஏரியில் ரூ.120 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. எனினும், ஏரியில் தூர்வாரமல் கரைகளை உயர்த்தி மதகுகள் அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், 3 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் 2,411 ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன. ஏரியின் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், ஏரியின் நீரை நம்பி மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதிபெற்று வருகின்றன.

Read Entire Article