மதுபோதையில், 16 வயதுச் சிறுவன் மற்றும் கல்லூரி மாணவரைத் தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர், ரபீக் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மனோ மகன்களின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் சிக்னலை கண்காணித்து வருவதாகவும், அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.