வேலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும், இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதால் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் கூறினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துடையாடல் நிகழ்ச்சி இன்று (செப்.10) நடைபெற்றது. இதில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். அப்போது, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் வினித், வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி மற்றும் ஆவின் நிர்வாக அதிகாரிகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.