“மது ஒழிப்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” - அக்.2 மாநாடு; அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு

1 week ago 7

சென்னை: “வரும் அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் இணைய வேண்டும், அதிமுக கூட இணையலாம்.” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மனித வளத்தை பாழ்படுத்தும் மதுவை அரசே விற்பது தேசத்துக்கு விரோதமான செயல். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, அசோக்நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 2006-2024 காலகட்டத்தில் 1589 பேர் பலியாகியுள்ளனர்.

Read Entire Article