திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் காரல் மார்க்ஸ்(45). குளம், குட்டைகளில் விவசாயிகள் இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மணல் எடுக்க தாசில்தார் காரல்மார்க்சிடம் புரோக்கர் ஒருவர் பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ரூ.50 ஆயிரம் கேட்டீர்கள். தற்போது ரூ.20 ஆயிரம் தருகிறேன் என்று புரோக்கர் பேசியுள்ளார். இதுகுறித்து விசாரித்ததில் தாசில்தார் காரல் மார்க்ஸ் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சாருஸ்ரீ நேற்றுமுன்தினம் அதிரடி உத்தவிட்டார்.
The post மணல் எடுக்க லஞ்சம் தாசில்தார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.