மட்டன் கொத்துகறி அடை

1 week ago 6

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 20 கிராம்
கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) – 200 கிராம்
சோம்பு – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
காய்ந்த மிளகாய் – 20 கிராம்
தேங்காய் – 50 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
சின்னவெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 20 கிராம்
கொத்த மல்லித்தழை – 20 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.புழுங்கலரிசியை தனியாகவும், கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து இறக்கவும்.புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடைசியாக மட்டன் கொத்து கறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும். சூப்பரான மட்டன் அடை ரெடி.

The post மட்டன் கொத்துகறி அடை appeared first on Dinakaran.

Read Entire Article