“மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற முதல் காரணமே மோடிதான்!” - உதயநிதி பேச்சு

2 hours ago 5

சென்னை: “மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முதல் காரணமே பிரதமர் மோடிதான்” என்று திமுக பவளவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக பவள விழா நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில், திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பணியாற்றியவர்களில் 75 வயது நிரம்பியவர்களுக்கு பொற்கிழி, சான்றிதழ், நினைவுப்பரிசும், 60 வயதைக் கடந்த 1000 தொண்டர்களுக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது. இவற்றை வழங்கிய இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலி்ன் பேசியதாவது: “கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு 3 காரணங்கள் இருந்தன. அதில் முதல் காரணம் பிரதமர் மோடிதான். அவர்தான் திமுகவுக்கு வெற்றியை அளித்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்ற போது இருந்த பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு நிலைக்கும் பிரதமர் மோடி தான் காரணம்.

Read Entire Article