திருவாரூர்: சென்னை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்த சென்ற மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது, தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும் என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஆண்டுதோறும், மன்னார்குடியில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளிலும் படித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு எழுதுபொருள், நோட்டுப் புத்தகங்களை கொடுப்பதற்காக நான் மன்னார்குடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்ற போது மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி அரசு பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் கொடுக்க அனுமதி இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கியதை நிகழாண்டில் மட்டும் தடுப்பதில், உள்நோக்கம் உள்ளது.