அவிநாசி: அவிநாசி அருகே மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலம் உள்ளது. இந்த அலுவலகத்தை இன்று (செப்.10) முற்றுகையிடப் போவதாக நவீன மனிதர்கள் இயக்கம் என்ற அமைப்பு அறிவித்தது. அதன்படி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி சுப்பராயன் தலைமையில் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர்.அலுவலகத்தை முற்றுகையிட போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், அதே பகுதியில் உள்ள அணைப்புதூர் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.