மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்: கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக கோரிக்கை

1 week ago 6

 

கருங்கல், செப்.11: தொழிக்கோடை அடுத்த பாரக்கன்விளை சமூக நலக் கூடத்தில், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும். கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும். 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிள்ளியூர் தொகுதியை திமுக பெற்று போட்டியிட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிள்ளியூர் பேரூர் செயலாளர் சத்தியராஜ், திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் பாலூர் தேவா, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ஜெனோ, மாவட்ட பிரதிநிதிகள் ஜேக்கப் ததேயுஸ், செல்வராஜ், பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் ஜெபா, மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்: கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article