சென்னை: மோசடி நபர்கள் உருவாக்கியுள்ள போலி பாஸ்போர்ட் இணையதளங்கள் மூலம், பொதுமக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டாம் என வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது, புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியில் நடைபெறுகிறது. இதை சாதகமாக்கி மோசடி நிறுவனங்கள் போலி இணையதளங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.