போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்தை வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி பரிமாற்றம்: ஜாபர் சாதிக் வழக்கில் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் மனு

3 hours ago 3

சென்னை: போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கு கணக்குகளில் செலுத்தி ஜாபர் சாதிக் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அவரை கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன்க கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்துள்ளார். அதன் மூலம் ஈட்டப்பட்ட தொகையில் தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கு மட்டுமன்றி, இயக்குனர் அமீரின் வங்கு கணக்கு மற்றும் போலி நிறுவனங்களின் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார். எனவே, ஜாமீன் வழங்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை மார்ச் 2ம் வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

The post போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்தை வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி பரிமாற்றம்: ஜாபர் சாதிக் வழக்கில் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் மனு appeared first on Dinakaran.

Read Entire Article