பொன்னமராவதி தாலுகாவில் நாளை முதல் ஜமாபந்தி துவக்கம்

4 hours ago 4

பொன்னமராவதி, மே 14: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் நாளை 15ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது. ஆண்டு தோறும் வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் கணக்குகள் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டர், சப்கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில், பொதுமக்கள் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் நாளை 15ம் தேதி முதல் காரையூர் பிர்காவிலிருந்து துவங்குகிறது. இதனைத்தொடர்ந்து, 16ம் தேதி அரசமலை பிர்காவிற்கும், 20ம் தேதி பொன்னமராவதி பிர்காவிற்கு நடக்கிறது. குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் ஜமாபந்தியில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என தாசில்தார் சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பொன்னமராவதி தாலுகாவில் நாளை முதல் ஜமாபந்தி துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article