திருப்பூர்: “நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்,” என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையத்தில் விபத்தில் உயிரிழந்த மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் காளியாதேவி இல்லத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (செப்.18) நேரில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “காளியாதேவி விபத்தில் உயிரிழந்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பதை அவரது குடும்பத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் காவல்துறையிடம் தெரிவித்து வருகிறோம்.