சென்னை: பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி, பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் இருந்தனர்.