கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை விரைந்து சரி செய்ய வேண்டும்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
இதன் காரணமாக பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, திறந்த நிலையில் உள்ள இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான சீரமைப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பெரியகுளத்துப்பாளையத்தில் பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.