பூட்டிய வீட்டில் நகை திருட்டு

3 hours ago 2

தேன்கனிக்கோட்டை, செப்.20: அஞ்செட்டி அருகே உள்ள தடிக்காத்தன்தொட்டியை சேர்ந்தவர் வினோதம்மாள்(55). இவர் கடந்த 17ம் தேதி காலை, வீட்டை பூட்டி விட்டு விவசாய நிலத்திற்கு செனறார். சிறிது நேரம் கழித்து வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் வைத்திருந்த ஒரு பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வினோதம்மாள் அளித்த புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post பூட்டிய வீட்டில் நகை திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article