புதூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

3 hours ago 2

விளாத்திகுளம், செப். 20: புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மைய முடிவின்படி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். பிடிஓக்கள் வெங்கடாசலம், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article