பாவமேனு லிஃப்ட் கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - அசந்த நேரத்தில் முதலுக்கே மோசம்

1 week ago 8

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே லிஃப்ட் கேட்டு சரக்கு வாகனத்தில் ஏறிய நபர், அசந்த நேரத்தில் சரக்கு வாகனத்தையே கடத்தி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

எடப்பாடியை சேர்ந்த சரக்கு வாகன உரிமையாளர் ராஜமாணிக்கம், அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்கவே, இறக்கப்பட்டு லிஃப்ட் கொடுத்துள்ளார். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு குடிதண்ணீர் பிடிப்பதற்காக ராஜமாணிக்கம் இறங்கியுள்ளார். அப்போது, சாவியுடன் இருந்த சரக்கு வண்டியை, அந்த இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திச் சென்றார். போகும் வழியில், வண்டியில் இருந்த அரிசி மூட்டைகளையும் அவர் விற்பனை செய்துள்ளார். பின்னர், சரக்கு வாகனமானது பழக்கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சரக்கு வாகனத்தை கடத்திய அஜித்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.

Read Entire Article