“பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது” - ஆளுநர் ஆர்.என்.ரவி

2 hours ago 4

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி மலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35வது பட்டமளிப்பு விழா திருவட்டாரில் இன்று (செப்.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சமய வகுப்பு மாணவ மாணவியருக்கு வித்யா பூஷன் பட்டங்களை வழங்கினார். முன்னதாக ஆளுநருக்கு இந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: “இந்து தர்ம வித்யா பீடத்திற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். பாரதத்தை மிகச் சிறந்த நாடாக உயர்த்தும் நோக்கில் 40 ஆண்டுகளாக இந்திய தர்ம வித்தியா பீடம் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக அயலக ஆட்சியில் நமது தர்மத்தை அழிக்க என்னென்ன முடியுமோ அதற்கான முயற்சிகள் செய்தார்கள். அவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளோம்.

Read Entire Article