பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான்: அன்புமணி ராமதாஸ்

4 days ago 5

மதுரை: “அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் ராமதாஸும், திருமாவளவனும் போராடிவருகிறார்கள். பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் இன்று பேசினார்.

மதுரை பழங்காநத்தத்தில் பாமக 36-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று அக்கட்சியின் மதுரை மத்திய மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழ் வரலாறு என்றாலே மதுரை மண்தான். ஆட்சி அதிகாரத்திற்கு வராமலே, வருவதற்கு முன்பாகவே தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் போராடி தீர்வு கண்டுவருகிறது பாமக. தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தொழில்வளம் பெறவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் சூழ்ச்சியிட்டு சமுதாய அடிப்படையில் மக்களை பிரித்து சண்டை மூட்டி அரசியல் பிழைப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

Read Entire Article