பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ: கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் திணறல்

3 days ago 4

மதுரை: மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக், இரும்பு குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இப்பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மதுரை உத்தங்குடி பகுதியில் பழைய பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பொருட்களை காலி இடத்தில் கொட்டி குவித்து வைத்து குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். இன்று காலை பழைய பொருட்களில் திடீரென தீப்பிடித்தது. இதில் இப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

அருகாமையில் தனியார் மருத்துவமனை நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஏற்கனவே, இதே பழைய பொருட்கள் குடோனில் முன்பு தீப்பிடித்தது. இது இரண்டாவது சம்பவமாகும். தற்போது முழுமையாக பொருட்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ: கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் திணறல் appeared first on Dinakaran.

Read Entire Article