சென்னை: ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.