பழுதடைந்த பேருந்து நிழற்குடைகள்: ரூ.1 கோடியில் சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

1 day ago 8

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகரப் பகுதியில் பழுதடைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை ரூ.1 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி சார்பில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்பட்டன. மது போதையில் இருப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் மாறியிருந்தது. நவீன நிழற்குடைகளில் இடம்பெற்றுள்ள பதாகைகளில் அரசின் சாதனை விளம்பரங்கள் மீது கட்சி மற்றும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தன.

Read Entire Article