பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

2 hours ago 5
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறி பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி புட் நிறுவனமே பழனி கோவிலுக்கும் நெய் விநியோகிப்பதாக பா.ஜ.க. நிர்வாகிகள் வினோஜ் பி.செல்வம் மற்றும் செல்வகுமார், தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தவறான தகவலை பரப்புவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவின் நிறுவனத்திடம் இருந்தே நெய் பெறப்படுவதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Read Entire Article