பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-திண்டுக்கல் வரை பகுதியாக ரயில்கள் ரத்து..!!

3 days ago 7

திருச்சி: திருச்சி-திண்டுக்கல் இடையே ரயில் பாதை பராமரிப்பு நடக்க இருப்பதால் ஈரோடு-திண்டுக்கல் வரை பகுதியாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர்.18 முதல் 23-ம் தேதி வரையிலும், செப்டம்பர்.25 முதல் 30 வரையிலும் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை புறப்படும். வண்டி எண் 16845 ஈரோட்டிலிருந்து திண்டுக்கல் வரை ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. அக்டோபர்.2 முதல் அக்டோபர்.7 வரை திண்டுக்கல்லில் இருந்து மட்டுமே செங்கோட்டை புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வண்டி எண் 16846 செங்கோட்டை ஈரோடு விரைவு ரயில் செப்டம்பர்.19 முதல் 24 வரை, அக்டோபர்.1,3 முதல் 7 வரை திண்டுக்கல் வரைசெல்லும் என அறிவித்துள்ளது.

The post பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-திண்டுக்கல் வரை பகுதியாக ரயில்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article