பனவடலிசத்திரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

2 days ago 3

சங்கரன்கோவில்,மே 12: பனவடலிசத்திரம் அருகே மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 35 மதுபாட்டில்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பெருமாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அவரிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கங்கனங்கிணறை சேர்ந்த மாடசாமி மகன் குருசாமி (39) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் குருசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 35 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post பனவடலிசத்திரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article