பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

1 week ago 5

சென்னை: பணி நிரந்தம் செய்ய கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில்வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.10,000 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரிபகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

Read Entire Article