பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு தாமதம்: பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்த உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

1 day ago 5

மதுரை: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கான இழப்பீடு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.

விருதுநகர் மாவட்டம் காசிரெட்டிபட்டியை சேர்ந்த விஜய் என்ற பீமா ராவ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘விருதுநகர் அச்சங்குளம் ஸ்ரீமாரியம்மன் பட்டாசு ஆலையில் 2021-ல் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

Read Entire Article