நெல்லை அருகே டிராக்டரில் சரள் மண் கடத்திய டிரைவர் கைது

3 hours ago 2

நெல்லை, செப். 20: நெல்லை அருகே அரசு அனுமதியின்றி டிராக்டரில் சரள் மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மானூர் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் வந்த டிராக்டரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி டிராக்டரில் சரள் மண் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரின் உரிமையாளரும் டிரைவருமான தேவர்குளம் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்த வேல்துரையை (25) கைது செய்தனர். மேலும் டிராக்டர் மற்றும் 2 யூனிட் சரள் மண் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post நெல்லை அருகே டிராக்டரில் சரள் மண் கடத்திய டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article