கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடபாதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (54). விவசாயியான இவரது வயலில் அறுவடை செய்த நெல்லை வலசக்காடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார்.
நேரடி கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூட்டைக்கு ரூ.55 கமிஷன் தருமாறு கேட்டுள்ளனர். சந்தோஷ்குமார் கமிஷன் தர மறுத்துள்ளார். இதனால், அவரது நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.