நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு லஞ்சம் கேட்டு செய்யூர் எம்எல்ஏ மிரட்டுவதாக ஒப்பந்ததாரர் வழக்கு

6 days ago 6

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தை சேரந்த டிஎஸ்ஆர் சன்ஸ் இந்தியா இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நபார்டு திட்டத்தில் ஊரக பகுதிகளான எம்வி ரோடு முதல் அகரம் பகுதி வரை சாலை அமைக்க நெஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது. அதில், புத்திரன்கோட்டை முதல் மாம்பாக்கம் அகரம் ரோடு வரை இரு சாலைகள் அமைக்கும் டெண்டர் எங்களது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செய்யூர் எம்எல்ஏ பனையூர் எம்.பாபு, புத்திரன் கோட்டை பஞ்சாயத்து தலைவரான நிர்மல் குமார், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ராமையா ஆகியோர் லஞ்சம் கேட்டு மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.

Read Entire Article