“நிதிக் குழுக்களின் நடவடிக்கைகளால் தமிழகத்துக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு” - அமைச்சர் தங்கம் தென்னரசு 

1 week ago 8

சென்னை: “சிறப்பாக செயல்படும் மாநிலங்களை கட்டுப்படுத்தும் அணுகுமுறையை நிதிக்குழுக்கள் மாற்றிக் கொண்டு, அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 16-வது நிதிக்குழு தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: “இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையிலான அதிகாரங்கள், பொறுப்புகளை பகிர்ந்து அளிப்பதில் இந்திய அரசியலில் உள்ளார்ந்த அரசியல் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

Read Entire Article