நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

6 days ago 6

சென்னை: நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் நலன் கருதி நாளை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (15.09.2024) காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article