நாசரேத் பாக்கியபுரத்தில் புதிய பேவர்பிளாக் சாலை திறப்பு

1 week ago 10

நாசரேத், செப். 13: நாசரேத் பாக்கியபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி திறந்து வைத்தார். நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட பாக்கியபுரம் தெருவில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து புதிய பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்ஐக்கள் ராஜன், சண்முகவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, ஜேம்ஸ், ஸ்டெல்லா, ரதி, ஜெயா, மாவட்ட திமுக பிரதிநிதி தாமரைச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் சந்திரன், முருகேசன், மோகன் மற்றும் நடராஜன், ஆழ்வார், பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாசரேத் பாக்கியபுரத்தில் புதிய பேவர்பிளாக் சாலை திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article