நாகர்கோவிலில் காய்கறி வியாபாரி தற்கொலை

1 hour ago 2

நாகர்கோவில், செப்.26: நாகர்கோவில் கோட்டார் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி பாலன் (50). காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மனைவி கண்டித்ததால், வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று உள் பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க வில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, ஆன்டனி பாலன் மின் விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் ஆன்டனி பாலன் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆன்டனி பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவிலில் காய்கறி வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article