தேன்வயல் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

1 week ago 8

கூடலூர் : கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன்வயல் பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகள் இங்கு வசிக்கும் விவசாயிகளின் தென்னை பாக்கு மரங்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. முதுமலை வனப்பகுதியில் இருந்து வரும் இந்த 2 யானைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக தேன்வயல், குனில்வயல், புத்தூர்வயல், வடவவயல் உள்ளிட்ட வன எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தேன்வயல் பகுதியில் வசிக்கும் விவசாயி செரியன் என்பவரது தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் வரும் இந்த 2 யானைகள் நூற்றுக்கும் அதிகமான பாக்கு மற்றும் தென்னை மரங்களை அடியோடு சாய்த்து சேதப்படுத்தி உள்ளன.

வன எல்லையில் உள்ள அகழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேன்வயல் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Read Entire Article