புதுச்சேரி: புதுச்சேரியில், ‘பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024’ கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆ.என். ரவி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முன்னதாக விஞ்ஞானி மற்றும் அரசியல் விமர்சகர் ஆனந்த் ரங்கநாதன் வரவேற்று பேசினார். அப்போது அவர், “விழா முடிவதற்குள் அனைவரும் வரியை கட்டிவிடுங்கள்” என நகைச்சுவையாக குறிப்பிட்டார். அதன்பிறகு பேச தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “வரி தொடர்பாக என்னிடம் இன்னும் 7 நாட்களுக்கு பேசாதீர்கள். இல்லை என்றால் என்னிடம் மன்னிப்பு கேட்டதாக தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்” என்றார்.