தெலங்கானா, ஆந்திராவுக்கு தலா ரூ.1 கோடி வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கினார் துணை முதலமைச்சர் பவன் கல்யாண்..!!

1 week ago 7

ஆந்திரா: கனமழையால் பாதித்த தெலங்கானாவுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் வழங்கியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழையால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் கர்ணூல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரைப்பட துறையினர் பலர் நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அளித்துள்ளார்.

The post தெலங்கானா, ஆந்திராவுக்கு தலா ரூ.1 கோடி வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கினார் துணை முதலமைச்சர் பவன் கல்யாண்..!! appeared first on Dinakaran.

Read Entire Article