தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நாளை ஆதார் பதிவு, திருத்த சேவை முகாம்

6 days ago 6

தூத்துக்குடி,செப்.14: தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொ) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை (15ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக்கொள்ளவும், மேலும் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்குழந்தைகளின் ஆதார் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நாளை ஆதார் பதிவு, திருத்த சேவை முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article