திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

4 hours ago 4

திருவள்ளூர்: திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியின் விளையாட்டு விழாவில் பங்கேற்று, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை தேசிய அளவிலான தடகள விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான பி.லக்ஷ்மி வழங்கினார். சென்னை பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலை திருவேற்காட்டில் சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் விளையாட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சந்தோஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்வி இயக்குநர் சிவாஜி வெங்கட் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தேசிய அளவிலான தடகள விளையாட்டு வீரரும், சிறந்த பயிற்சியாளருமான பி.லக்ஷ்மி கலந்துகொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பாதக்கம், பரிசு, சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார். இதில், இளஞ்சிறார்களின் உடற்பயிற்சி நடனம், மாணவர்களின் மேற்கத்திய நடன நிகழ்ச்சி, கராத்தே வாள்வீச்சு, சிலம்பம் போன்ற வீரசாக விளையாட்டுகளும் நடைபெற்றன. நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article