“திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகரத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்” -  அமைச்சர் தகவல்

1 week ago 9

சென்னை: “திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்” என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணி, அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும் இடங்களை, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read Entire Article