திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாட அரசுக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

1 day ago 4

சென்னை: திருவள்ளுவரின் பிறந்த நாளை வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று கொண்டாட அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தமிழ் மாதம் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தை தமிழக அரசு விடுமுறை நாளாக அனுசரிக்கிறது. ஆனால் உண்மையில், திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவரான பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Read Entire Article