“திருமாவளவன் முதலில் பாமகவையே அழைத்திருக்க வேண்டும்” - அன்புமணி | மது ஒழிப்பு மாநாடு

5 days ago 4

மதுரை: திருமாவளவன் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டை பாமக ஆதரிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுகிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி.

அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல வி.சி.க-வை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்.

Read Entire Article