திருமணமான 11 நாளில் புதுப்பெண் மாயம்

1 week ago 8

கடலூர், செப். 12: திருமணமான 11 நாளில் புதுப்பெண் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (29). இவரது மனைவி தங்கமணி (19). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த தங்கமணியை திடீரென காணவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கிருஷ்ணன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான 11 நாளில் புதுப்பெண் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article