மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து சமண கொள்கைக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. சமணர் குன்று என அறிவிக்க கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் பேசியதாவது, அரசு யாரிடமும் எந்தவித மதபாகுபாட்டையும் காட்டவில்லை; மதநல்லிணக்கத்தையே விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மனு குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
The post திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக மேலும் ஒரு வழக்கு..!! appeared first on Dinakaran.