திருச்சியில் 7 ஆண்டுகளாக மாணவர்கள் வைத்த கோரிக்கைக்கு தீர்வு... ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

1 week ago 10
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு பேருந்து வசதி கோரி மாணவர்கள் மேற்கொண்ட பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வடக்கிபட்டி, ஊர்க்காடு, ராசாம்பாளையம் உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் தினமும் மூன்றரை கிலோ மீட்டர் பள்ளிக்கு நடந்து சென்று வந்த நிலையில், பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Read Entire Article