திருச்சி: திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தபோது, பெல் ஊழியரும், அவரது ஆறு வயது மகளும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மூத்த மகள் கிருத்திகா(13) பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் யாஷிகா (6) 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுரேஷ், தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக சென்றார்.