திருக்குறள், திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

4 hours ago 2

சென்னை: திருக்குறள், திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘திருக்குறள், திருவாசகம்’ தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் ‘கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம்’கல்வி திட்டத்தின் கீழ் (தலா ஒரு ரூ.1 லட்சம்) இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆராய்ச்சியாளர்களை தேர்வு செய்வதற்கு உரிய விண்ணப்ப படிவங்கள் ஆய்வாளர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க குறிப்பிட்ட படிவத்தை தமிழ்நாடு அறக்கட்டளை இணைய தளத்தில் இருந்து (www.tnfindia.org) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறக்கட்டளை, 1.27. டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 எனும் முகவரிக்கு 10.10.2024 வியாழக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருக்குறள், திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article