மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை போலீஸார் வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் நகரப்பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார். அதிமுகவின், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு சிலர் அடிக்கடி சிலர் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக, அதிமுக பேரூர் செயலாளர் திருக்கழுகுன்றம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.